Thursday, May 18, 2006

ஒரு அம்மா பாட்டியாகும் கதை

அந்த நாளும் வந்தது. எங்கள் பேரன் எங்கள் கைக்கு வந்து சேரப்போகும் நாள்.
வேப்பிலை இல்லியே, பேசாமல் நம்ம அம்மாவை அழைத்து வந்து இருக்கலாமோ/எனக்கு இந்த மாதிரி பிரசவம் நெருங்க்கும் நேரம் என் அம்மா,அப்பா எப்படி நடந்துகொண்டார்கள்? பயந்தார்களா?


எல்லா நேரத்திலேயும் அவர்கள் அமைதியாக இருந்த மாதிரி தான் எனக்கு நினைவு.
இங்கே மருமகனும், பெண்ணும் அதெ அமைதியோடு செயல் பட்டார்கள்அவர்களூக்கு மருத்துவர்கள் சொல்லித் தந்த முறைப்படிநிதானமாக, வேண்டும் பொருட்களையெல்லாம் ஒரு பெட்டியில் அடுக்கி வைத்தார்கள்.

 நான் மூணாம் பேஸ்து(இதுவும் ஒரு வார்த்தை குமரனைத்தான் கேட்க வேண்டும்.)அடித்த மாதிரி எப்போதும் வாயில் ஆபத்துக் காலஙளில் (எனக்கு ஆபத்து என்று தோன்றும்) முணுமுணுக்கும் ஆபதாம் அபகர்த்தாரம், கந்தசஷ்டி கவசம்,எதுவும் நினைவுக்கு வராமல் அவர்களையெ வெறித்துப் பார்த்து கொண்டு இருந்தேன். மருமகனுக்குத் தோன்றி இருக்க வேண்டும், ஒருவேளை 10 நாட்கள் முன்னால்வந்த மாதிரி பி.பி. எகிறிவிட்டதோ?


படபடப்போ? அம்மா, பொண்ணு இரண்டு பேருக்கும் வைத்யம், காவல் இருக்க வேண்டுமோ என்று நினைத்தாரோஎன்னவோ,என்னிடம் வந்து மெல்ல"அம்மா  இது ஒன்றும் பயப்பட வேண்டிய விஷயம் இல்லை. ஹாஸ்பிடல்,டாக்டர்எல்லோரும் ரெடியாக இருப்பார்கள். கவலையெ இல்லை, நீங்கள் வேணுமானால்,கெடொரேட் (ரஸ்னா மாதிரி) சாப்பிடலாமெ/ தெம்பாக இருக்கும் என்று சமாதானப் படுத்துவதாக எண்ணிஆரம்பித்தார்.அதற்குள் பெண்ணிற்கு அவசரம் ஆகவே காரில் போய்க்கொண்டே பேசலாமெ, அம்மா வரியா, என்று கேட்க
எப்போதும் சொல்வது போல் நீங்க போய்விட்டு குழந்தை பிறந்ததும் எனக்கு சொல்லவும்என்று பதில் கொடுக்க ஆசை தான்.என்ன செய்வது, அன்னையருக்கு என்று கடமை இருக்கிறதே,

அதனால் வரவழைத்துக்கொண்ட அசட்டு தைரியத்துடன் முருகனைப் பார்த்து கும்பிடு போட்டு விட்டுமருத்துவ மனையை நோக்கி பயணித்தோம்.
எப்போதும் கேட்கும் 'பால் வடியும் முகம்"திரு மஹாராஜபுரம் சந்தானத்தின் பாடல் கொஞ்சம் தெம்பு கொடுத்தது. எண்ணீ 20 நிமிடப் பயணத்தில் செயிந்ட் மெரி மருத்துவ மனையும் வந்துவிட்டது. இந்தக் குழந்தைகளுக்கெல்லாம் எப்படித்தான் இரவு நேரம்தெரியுமோ. எல்லா அம்மாக்களுக்கும் வலி என்பது அப்போதுதான் ஆரம்பிக்கும்,அதே போல் மருத்துவமனை
செவிலிகளுக்கும் அது பழக்கமாகி விட்டது.

அப்படியெ தாயாகப் போகும் அவஸ்தையில் இருக்கும் பெண்ணையும்அவளுடன் வந்த எங்களையும் நிலைப்படுத்தி சிகித்சையை ஆரம்பித்தார்கள்.
நாங்கள் ஏற்கனவே பதிவு செய்த அறைக்குப் போனோம்.

முதலில் டாக்டர் ஓய்வு எடுத்துக்கொள்ளச் சொன்னது யாரைத் தெரியுமா? என்னைத்தான்.
பத்து மணி நேரம்  கழித்து,  பத்து பவுண்ட் எடையில் காலை 10.10க்குப் பிறந்தான்  

 அது முதல் என் தூக்கம் என்னைத் தொந்தரவு செய்யாதது எல்லாமெ தனிக்கதை. அவன் முகம் என் எல்லா சோர்வையும் விரட்டி விட்டது.

புது சுறு சுறுப்பு,சக்தி எல்லாம்வந்து நான் முழுமையாக இயங்க ஆரம்பித்தது அப்புறம்தான். பாட்டி இல்லயா? இப்போதும் எங்களுக்கு அரு மருந்து குழந்தைகள்தான்.
அது எப்படி ஒரு உலகையே வெற்றி கொள்ளும்,
பள்ளி, ,கல்லூரி சீட் வாங்கும் அம்மா,
ஒரு தைரிய புலி,சிங்கம்
தன் மகளின் வலிக்கு முன்னால் பூனையாகி விடுவது ஏன்?

Wednesday, May 17, 2006

ஒரே வழிசல்

வழிவது என்ற சொல் எப்படி வந்து இருக்கும்.?பாத்திரம், பண்டம் நிரைந்து விட்டால் வழிந்து ஓடும் அதே மாதிரி அணைக்கட்டு, பால் பொங்கி வழிவது எல்லாமே நமக்குத் தெரிந்த விஷயங்கள்தான்.இப்பொது நான் சொல்ல வந்தது அந்த வழிவது இல்லை. பழங்கால வழிசல். எப்போதெல்லாம் இந்த அனிச்சை செயலை நாம்,இல்லாவிட்டால் மற்றவர்கள் செய்கிரார்கள் என்று பார்த்தால்,முதல் காரணம் நம் புத்திசாலித்தனத்தின் மேல் நமக்கு இருக்கும் அபார நம்பிக்கை தான். ஒரு உற்சாக வேளையில், ( எங்களுக்கெல்லாம் புடவைகள், சினிமா, சாப்பாடு (சர்க்கரை ரத்ததில் இருந்தால் அதை பற்றியே பேசத்தோணுமாம்) பற்றிப்பேசும்போது தனியாக ஒரு உற்சாகம் பிடித்துக்கொள்ளும்).என் தோழி தான் வாங்கின கைத்தறி புடவையை சிலாகித்துப் பேசி எல்லாரையும் அசத்தினாள். அந்த ஊரில் நெசவாளிகள் கஷ்டப்படுவதையும் தான் எல்லோருக்கும் அங்கிருந்து தறி விலைக்கே தருவித்துக் கொடுப்பதாகவும் உணர்ச்சி பொங்கக் கூறும் போது தான் மாட்டிக்கொண்டாள். இதோ அவள்,"" இந்த மாதிரி நீங்க பார்த்தெ இருக்க முடியாது.நீலத்திலெ ப்ளூ ஸ்பாட்ஸ்,ப்லாக்கிலே கருப்பு பொட்டு,சிவப்பிலே ரெட் பார்டெர் "" என்று அடுக்கிக் கொண்டே போனாள்.எங்களுக்கு அவள் பேச்சின் தீவிரம் உரைத்ததே ஒழிய அதிலிருந்த காமெடி,முரண் புரியவில்லை.உண்மையாகவா? எல்லாம் புதுப் புது அமைப்பாக இருக்கிரதே. நீலத்திலே ப்ளூ!!. ரேர் காம்பினஷன்ந்ம்ம எல்லோரும் சேர்ந்து வாங்கினால் அந்த தறிக் குடும்பத்துக்கு உதவி. செய்த மாதிரி இருக்கும். ,என்று ஆளுக்கு 2 கருப்பிலே ப்லாக் புட்டா, ரெட்டிலே சிகாப்பு பார்டர் என்று அவரவர் கற்பனையில் மூழ்கின போதுதான்,அடச்சே என்று விழித்துக்கொண்டோம். அவள் சொன்னதைதிருப்பிச் சொல்லும்போது நாங்கள் செய்த வண்ணக் கனவு புடவைகள் சாயம் இழந்தன.ஓ, இந்த வெய்யில் என்னை குழப்பி விட்டது. உங்களுக்குப் பிடித்த எப்போதும் உடுத்தும் துணிமணிகளே வாங்கலாம் என்று அவசர அவசரமாக நடையைக் காட்டினாள். அதிலிருந்து நாங்கள் அவளை " அ ரேர் காம்பொ " என்றுதான் அழைக்கிறோம்.

Monday, May 15, 2006

பொருனைக்கரையிலே: Porunai aththangaraiyile

பொருனைக்கரையிலே: Porunai aththangaraiyile www.kurungudi.blogspot.comThursday

thatha paattis wedding
thatha was 22 and paatti was 14 when they saw each other. paatti's appa sri KV.Veeraraghavan decided to conduct the marriage in Keezhanatham, his native village. since it was 2nd world war time, and commodities were hard to come by, they must have fornd it easier to think about a village wedding.all of the family, the Veeraraghavans, the sisters, the brothers of OUR thatha and paatti started from Madras and arrived in Keezhanatham long before the wedding date.the Bridegroom's side arrived from Thirunelveli.It was a gala affair of 5 days wedding.though the groom's side was not very satisfied with the economics of the simple wedding, they were very fascinated with the pure beauty of the madras bride.the highlight of the Wedding was the Oorvalam arranged for the handsome groom a chariot ride.well decked with flowers and driven by two white horses, it was a magnificent occasion.. except for the weak horse which had replaced the stronger one and which took a wrong turn from the usual path.and the rest was history.Thatha managed to jump out of the chariot unhurt, and took the matter lightly. even though little bit shaken he was able to smile it off.but it was a well remembered event by the whole family. Paatti (smt.Jayalakshmi Narayanan) told me only in 2005!!!!
posted by ezhisai @ 10:11

Sunday, May 14, 2006

Porunai aththangaraiyile: thatha paattis wedding

Porunai aththangaraiyile: thatha paattis wedding

சித்திர பௌர்ணமி

Posted by Picasa பௌர்ணமி,அழகர்,அபிராமி எல்லாமே பார்தததுமே மனதைக் குளிரவைக்கும் நிகழ்வுகள், கடவுளர்கள்.
சித்திரை ,வைகாசி ,ஆவணி பௌர்ணமியும் கார்த்திகை பவுர்ணமியும் சிறப்பாகப் பேசப்படுகின்றன.
இப்படிப் பார்த்துகொண்டெ போனால் எல்லா நாளும் எதொ ஒரு விஷயத்தில் நமக்கு முக்கிய நாளாகப் போகின்றன.
பௌர்ணமியை அனுபவிக்க நமக்கு பவர்கட் வந்தால் தேவலை என்று எனக்குத் தோன்றும்.
வேரு வழியில்லாமல் எல்லொரும் வெளியெ வந்துதானே ஆக வேண்டும்.
சினிமாவால் இருந்தால் அது வேறு, சாப்பாடு,பாட்டு ,ஆட்டம். எல்லாம் வரும்.
எப்போதும் நினைக்க வைப்பது "அற்றைத் திங்கள்" என்று வள்ளல் பாரியின் மக்கள் பாடும் பாடல் தான்.
அது சோகம்.
னம்ம எம் ஜீ ஆரும் சரொஜா தேவியும் பாடிய வால்ட்ஸ் டைப் சாங்" அன்று வந்ததும் அதெ நிலா.'
பிறகு பாரதியும், சரொஜா தேவியும் பாடிய அன்றொருநாள் இதெ நிலவில் அவன் இருந்தான் பாடல்.
இப்போதும் நிலவு பாடல்கள் உண்டு.
னினைவுக்கு வர நேரமாகிறது.....:-)))



Rangamama-3

Vanakkam. ரஙக மாமா கதை, கவிதை எழுதுவான் என்று சொன்னேன் இல்லயா? இந்த போட்டோவும் அவனுக்கு கவிதை கொடுத்து இருக்கும். "அசைந்தாடு...