Friday, June 23, 2006

அரோவானா மீனாக்ஷி

Posted by Picasa மீனாட்சி என்று பெயர் சூட்டிக்கொண்ட இந்த அரோவானா வகை fஃரண்ட் எங்க வீட்டுக்கு வந்து 4 வருடம் ஆகிறது. 4 இன்ச் அளவில் அவள்/அவன் வந்த போது
எனக்கு கொஞ்சம் சந்தேகம் தான்.எவ்வளவு நாள் வாழ்வோ என்று.
ஏனெனில் அப்போது எங்கள் வீட்டுக்கு திடீர் மீனயோகம் அடிக்கும் வருடம்.
மீன்கள் வரும், நீந்துவதற்குப் பதிலாக மிதக்கும்.
பிறகு பக்கத்து வீட்டுப் பூனை உணவாக ஆகிவிடும்.
இதே போல் வாள மீன் விலாங்கு மீன் த்ிர மத்த மீன் வகையறாக்கள் வருவதும்
பெல்லி அப் செய்வதும்
நாங்கள் வருத்தப் படுவதும் நடந்து வந்தது.
அக்கம்பக்கம் பசங்க எல்லாம் "யேய் மீன் வரப்போரது " 'என்று வந்து பார்ப்பதும், அச்சச்சோ இதுவும் போயிடுத்தா
எண்று உச்சுக் கொட்டுவதும் வ்க்கமாகி விட்ட வேளையிலே.... எங்க வீட்டு எஜமானருடைய(நிஜமாகவே அவர்தான் எஜமானர்) உடற்பயிற்சியாளர் இந்த அரோவானா மீனை வளர்ப்பது பற்றீ ரொம்ப சிறப்பாக எடுத்து சொன்னார்.
அடக் கடவுளே இன்னோரு ஜீவனா என்று முதலில் தோன்றினாலும் அவர் சொன்ன அடுத்த நாளெ,
இந்த ஆசாமி (நம்ம மீன்டசி)ஒரு பாலிதீன் பையில் துள்ளிக்கொண்டு வந்து விட்டார்.

என்னுடைய மீன் (வேறு மாதிரிப் பார்த்த )கண்களுக்கு(ஜாண்டிஸ் eyes... சொல்லக் கூடாது) அது பரிதவிப்பதாகத் தோன்றியது.
இந்த மீனோடு வந்த உதவியாளர், அதற்கு உணவும் கொடுத்து விட்டுப் பொவார் என்ற நினைப்பில் நாங்கள் பரமரிப்பு பற்ரிய விவரங்களைக் கேட்கும் போது தான், தெரியும், வந்திருப்பவர் (arovaana)


லைவ் fish சாப்பிடுகிறவர் என்று.
சகலசைவப் பழக்கங்களையும் பின்பற்றும் வீட்டில்
உயிரொடு வாங்கித் தொட்டியில் போட்டு அது சாப்பிடுவதை வேறு பார்க்கணுமா. ,,சரிப்படாதே என்று நான் வாயைத் திறப்பதற்குள், எ-ர் சரிப்பா நான் பாத்துக்கிறேன் என்று சொல்லி வழிஅனுப்பி வைத்தார்.
அப்போது ஆரம்பித்தது மத்ஸ்யாவதாரப் பெருமை.
உண்மையாகவே இந்த வகை மீன் டிஸ்கவரி சானலில் வந்ததாம்.
அதன் விஸ்வரூபம் 6 அடியாம்.
வளர வளரத் தொட்டி பெரிசாக வேணுமாம்.
நான் நம்பவில்லை.
எல்லாம் ஹம்பக். சும்மா மார்க்கெடிங் பேச்சு என்ற யோசனையில், முதலில் 50 பைசா மீன் இரையாகப் போடலாம்னு நினைத்து இன்னொரு மீன்கள் விற்கும் கடைக்கு( அதாவது மீன் சாப்பிடற மீன் விற்கும் கடை. நீங்கள் வேறு ஏதாவது கற்பனை செய்ய வேண்டாம்)
போனோம்.
அவனுக்கு ஒரே குஷி.
என்ன சார் அரோனாவா. ??வீட்டுக்கு வாஸ்துப்படி நல்லது சார். !
இப்படியே தினம் 10 பொடுங்க. அப்பறம் வளந்தப்புறம்
பெரிசு போடலாம் என்று ஒரு 20 கறுப்பு கலர் மோல்லி எனும் மகிழ்ச்சியாகத் தங்களுக்கு நேரப்போவதைத் தெரியாத ஆடிக் கொண்டிருந்த ஒரு இன்ச் மீன்களைக் கொண்டுவந்தோம்.
வழி முழுவதும் இதென்னடா காலம். ஒரு வேளை இந்த அரோனா போன ஜன்மத்தில் நமக்கு விருந்தாளியோ,மாமியார்,மாமனாரோ இல்லாட்ட ஹாஸ்டலில் விடப்பட்டு சாப்பாட்டுக்கு நாம ஏங்க வைத்த பிள்ளையோ என்றெல்லாம் நாடி ஜோஸ்ய ரேஞ்சில் மனசு ஓடுகிறது.
இரண்டு வாரம் முன்னால் எங்கள் வீட்டுக்கு வந்த(பொழுது போகாமல் எல்லாருடைய சர்வ நாடியையும் ஆருடம் பார்த்து ஒரு வழி பண்ணுகிறவர்) so called சினேஹிதர்
என் கையைப் பார்த்து உங்களுக்கு 4 குழந்தைகள் பிறந்து இருக்கணுமே என்று கேட்டிருந்தார்.
சும்மா கேள்வி கேட்டாலே முழிக்கும் வகை நான்.
இந்த மாதிரி வாழ்க்கையே கேள்விக்குறி மாதிரி ஒரு குண்டு போட்டார்னால்// வெலவெலத்து விட்டது.
அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லையே.
எங்களூக்கு இந்த 3 குழந்தைகள் தான்.
வேற ஒண்ணூம் தெரியாதே என்று நான் அவஸ்தைப்பட
இவர் உள்ளுக்குள் சிரிப்பு வெளில சீரியஸாக வைத்துக் கொண்டு(ஜாதக ஜோசியமெல்லாம் நான் தான்) கவனிக்கிறார்.
என்னவெல்லாமொ நினைப்பு வருகிறது. ஒரு வேளை ' பழைய சினிமாக்கள் மாதிரி ஏடாகூடமாக ஏதாவது நடந்து
இருக்குமோ? இல்லையே, ஒவ்வொரு தடவையும் எல்லோரும் வரப் போகத்தானே இருந்தார்கள். இப்படி நான்
மாயமோஹினி trailer மாதிரி ரீவைண்ட் பண்ண, அவர் என் கையை இப்படித் திருப்பிப் பார்த்து ஆமாம்மா உங்களுக்கு மூன்று தான் என்று அசடு வழிந்தது,
இப்போது நினைவுக்கு வருகிரது. அதாவது feed fish வாங்கி வரும்போது.
எப்படியோ மீனும் வளர்ந்து மீனாக்ஷி என்று நாமமும் சூட்டி
நாளிரு மேனி பொழுதிரு வண்ணம் வளர்ந்து இப்போது 3 அடி நீளத்தில இருக்காங்க.
விட்டா வளருவாங்க.
எங்கே போறது அவ்வள்வு பெரிய தொட்டிக்கு.?
அப்புறம் நாங்கள் இடம் மாற வேண்டியதுதான்.
அதாவது சுவரோரம் உட்கார வேண்டி வரும்.
அவருக்கு தனி வாட்டர் purifier, air cleaner ,லைட் தனி.
அவரு தொட்டிக்கு உள்ள இருந்தே நம்மளை சர்வே பண்ணுவாரு.
வர சைவ ஆளுங்களுக்கு எல்லாம், சுத்தி வரும் குட்டி மீன்களை பெரிசோட கூட விளையாடும் என்று சொல்லுவோம company.
இப்போது எல்லோருக்கும் தெரியும். big eats small,
என்ன செய்வது!
பக்கத்தில போனா அம்மா என்கிறது.
என்னது மீனாவது குரல் கொடுப்பதாவதுனு ஒரு மாதிரி என்னைப் பார்க்க வேண்டாம்.
மீனாட்சிக்கு வேற யாரையும் தெரியாதே.
அதனாலே தன் மொழியில் என்னைக் கூப்பிடுகிறது.
அவ்வாளவுதான்.

ஆஸ்டரிக்ஸ்,ஓபிலிக்ஸ் &other gauls








மேலெ உள்ள அனைத்து உருவங்களும் எங்கள் குடும்பத்தில் ஒன்றியவை.
காசினி,உடர்சோ என்ற ப்ஃரென்ச் நண்பர்கள் உருவாக்கிய காமிக் காரெக்டர்கள் புத்தக வடிவிலும் இப்போது திரையிலும் உலா வருகிறார்கள்.
இவர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தியது எங்கள் குழந்தைகளின் பள்ளிப்பருவத்தில்.
அப்போது இந்தப் புத்தகங்களின் விலை 25ரூபாய் என்று நினைக்கிறேன்.
மாதம் ஒரு புத்தகம் என்ற கணக்கில் வாங்க முடிந்தது அவ்வளவுதான்.!
லாண்ட்மார்க் வருவதற்கு முந்திய காலம்.
அதுவரை ஹிக்கின்பாதம்ஸ்,கென்னடி புக் செண்டர்,PAI&CO
என்று எங்கள் புத்தக வேட்டைகள் நடக்கும்.
பிறந்த நாள் பரிசு அனேகமாகப் புத்தகங்கள் தான்.
பிறகு வருடாந்திர விழாவாகப் புத்தகக் கண்காட்சி வரத் தொடங்கியது.
அந்தப் பத்து நாட்களும் ஒரே பரபரப்புதான்.
எல்லொருக்கும் பொருந்தி, சரிவரும் நாட்களில் மதியத்திலிருந்து இரவும் மார்கழிக்காற்றும் கூடவே பசியும் வீட்டை நினைவுக்குக் கொண்டு வரும்போது
கிளம்பி விடுவோம்.
மனம் வராமல் இனிமேல் அடுத்த வருடம்தானா என்ற ஏக்கத்தோடுதான் திரும்புவோம்.
இப்போது நிலைமை வேறு.
குழந்தைகள் வளரும் நேரம் சுவைகளும் மாறின. அவர்களுக்குப் படிப்பு கூடியபோது பொழுதுபோக்கு ,நண்பர்கள், கல்லூரி கல்ச்சுரல், என்று மாறியது.
படிக்கும் புத்தகங்களும் சுய மேம்பாடு என்று அழைக்கப்படும் வகையில் திரும்பின.
ஆனால் நாங்கள் இன்னும் விரும்பும் பல நண்பர்களில் மேலெ படத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய இடம் உண்டு.இவர்களைத்தவிர இம்பெடிமெண்டா,ஜீரியாடிரிக்ஸ்,

ககாfஃனிக்ஸ், எப்போதுமே சண்டை போடும் மீன் விற்பவர்,முக்கிய உறுப்பினரான போர்(பன்றி,வராகம்)........

எல்லாருடைய படங்களும் போடவில்லை.

மீண்டும் பார்க்கலாமே.

Wednesday, June 21, 2006

ராம லக்ஷ்மண ஜானகி ஜய் போலோ ஹனுமானு கி

Posted by Picasa "தசாபுக்திகளும் ராமாயண பாராயணமும்" என்ற புத்தகம் ஒன்று கிடைக்கிறது..அதில் சொல்லி இருக்கிற முறைப்படி நாம் ராமாயண காண்டங்களைப் படிக்க நமது குறைகளைப்போக்கும் என்ற நம்பிக்கை உண்டு.
எனக்கு இந்தப் புத்தகத்தில் பிடித்தது, எல்லா அத்தியாயங்களும் சிறியதாகப் படிக்கக் கூடியதாக இருந்ததுதான்.
ராமாயணத்தில் எல்லா விதமான பிரச்சினைளுக்கும் பதில் இருப்பதாக எனக்குத் தோன்றும்.
திருமணம் ஆகாதவர்கள் படிக்க சீதாராம விவாகம்.
குழந்தை பிறக்க ச்ரிராம் ஜனனம்.
பிரிந்தவர் ஒன்று சேர சுந்தர காண்டம்,
தேடும் பொருள் கிடைக்க, ச்ரிஹனுமான்,இலங்கையில் சீதை அம்மாவைத் தேடியது,
நியாயமான ஆசைகள் நிறைவேற ,ஹனுமன் தேவியைத் தரிசனம் செய்தது.
மனம் கலங்காமல் உறுதியோடு இருக்க,, அனுமன் பல அழகிகளை ராவணனின் பள்ளியறையில் பார்த்தபோதும் தன் ப்ரம்மச்சரிய உறுதி கலங்காமல் இருந்த ஆச்சர்யம்,
ஆபத்துக் காலங்களில் சீதை மனம் உடையாமல் ராம நாமத்தை ஜபித்தது போல்,அதை நிரூபிப்பது போல் த்ரிசடை சொப்பனம் காண்பது, அதனால் ஒரு திண்ணம் நம்பிக்கை கிடைப்பது,
இராவணனே தன் பட்ட மகிஷிகள் சூழ வந்து பயமுறுத்தி
ஆசை வார்த்தைகள் பேசினாலும் அஞ்சாமல், துணிவுக்கு அரசியாக ஒரு புல்லைக் கிழித்து தனக்கும் அவனுக்கும் இடையே போட்டு அதை பார்த்து, அற்பப்பதரே
என்று விளிக்கிறாள்.
எல்லாத் துன்பங்களுக்கும் முடிவு உண்டு என்று தெரிவிப்பதற்கு சீதையின் கைகளில் ச்ரிராம மோதிரம் வந்து சேர்கிறது.
அனுமனின் விடா முயற்சியைத் தெரிவிக்க, நமக்கு உணர வைக்க, விஸ்வரூபம் எடுத்தல்,விண்ணில் ஏகுதல்,
மைனாக மலையை ஒதுக்கி விட்டு
விரைதல்,சுரைசையின் எதிர்ப்பை சமாளித்து அவள் ஆசி பெறுதல்,
சிம்ஹிஹா என்னும் அரக்கியை வெல்ல ,அவள் இதயத்தையே கிழித்து வெளிவருதல்,
இறுதியாக லங்கை வந்ததும்
விஸ்வரூபம் ,சாமானிய சிறிய வானரம் ஆவது
என்று நம்பிக்கை ஒன்றே சாதனை புரிய வைக்கும் என்ற் உண்மையையும் பக்தி விலாசத்தையும்
காணக் கிடைக்கிறது ஒரே புத்தகத்தில்.
அனுமனே கதாநாயகன் இங்கே.
சுந்தர காண்டம் முழுவதும் அனுமனின் ஆற்றல் வெளிப்படுகிறது.
ஆனால் யாராலும் பேசப் படாமலேயே போய் விடுகிறது.
தான் சீதையைத் தேடிய கதை சொல்கிறான்.
பார்த்ததை சொல்கிறான்.
அவள் மாண்மையைப் பேசுகிறான்.
ஆனால் தான் ஒருவனாக அரக்கர்களைக் கொன்று குவித்ததையோ நூறு யோஜனை தூரத்தைத் தாண்டிய
வீரத்தையோ அவன் பேசவே இல்லை.
அதனால் தான் அவன் சுத்த சுந்தர (காண்ட)ஆஞசனேயன் ஆகிறானோ? ஆமாம், சொல்ல மறந்து விடடேனே.
திரேதாயுக ராமன் 86" உயரம்.
இந்த ராமனை சீதை இலக்குவனுடன் பார்க்கலாம்.
8' அடி உயரத்தில் எளிமையாக மரவுரியோடு காட்சி அளிக்கிறான்.,
திருவள்ளூர் பக்தவத்சலம்,செங்கமலத்தாயார் கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள ஏரிகாத்த ராமன் கோவிலில் இருக்கிறான்.மதுராந்தகம் போலவே இங்கெயும்
ஏரியைக் காத்ததினால் இந்தப் பெயர். மறக்காமல் தரிசனம் செய்யவும்.

Sunday, June 18, 2006

ஆனந்தம் (கோபத்திற்குப் பிறகு)



ஆனந்தம்,அனந்தம்.மஹாலக்ஷ்மியுடன் இருக்கும்போதுதான்.
தனியாக இருந்த ராமனுக்குத் தான் எத்தனை கோபம்.
நாங்கள் திருப்புல்லணை என்னும் திருப்புல்லாணி ஆதி ஜகன்னாதபெருமாள் கோவிலுக்குப் போனபோது தான் பார்த்தோம்.
வெறும் தரையில் புல்லால் ஆன இருக்கையில் ராமன் படுத்து இருக்கும் கோலம். கடலரசன் வருகைக்குப் ப்டுத்துத் தபம், செய்கிறான்.மூன்று நாட்களாகப்பசியோடு காத்து இருக்கிறான்.
அவன் நினவோ கடலுக்கு அந்தக் கரையில் காத்திருக்கும்,, ஜானகியிடம்.
தவிப்புடன் இருக்கும் தனது மனைவியிடம் என்று மட்டும் இல்லாமல்,"உங்கள் அரசாட்சியில் நானும் குடியிருப்பவள் இல்லையா. ராமா உனக்கு அதுகூட நினைவு இல்லையா".உன் ஆளுமைக்கு உட்பட்டவளிடம் நீ அலட்சியமாக இருக்கலாமா,?" என்று அனுமனிடம் சொல்லி அனுப்பினாளே, அவள் துயரம் தீர்க்க நான் உடனே போகவிட்டால் என்னை ஒரு கணவன் என்றோ, ஒரு அரசன் என்றொ, சொன்ன சொல் காப்பவன் என்றோ எப்படி நினைக்க முடியும் என்று பரிதவிக்கிறான்.
இயற்கையாகக் கோபத்திற்கு இடம் கொடுக்காதவன்.
அவன் கோபித்த கணங்களை எண்ணி விடலாம்.
தன்னை நம்பியவர்களை யாராவது துன்பப் படுத்தினால்,
உடனே காக்க வந்து விடுவான்.
சீதையைக் காகாசுரன் குத்திக் கிழிக்க முற்படும்போது,
அவள் மடியில் தூங்கிக் கொண்டிருந்த ராகவன், சீற்றத்துடன் எழுந்திருக்கிறான்.
"படுத்திருந்த ஐந்து தலைக்கருநாகத்தை எழுப்பியவன் யார்' என்ற கேள்வியுடன்."/
சுற்றிப் பார்க்கிறான்.அப்போது அவன் பார்வையில் ஜயந்தன் என்ற, காக ரூபம் எடுத்தவன் (இந்திரன் மகன்) படுகிறான்.
ஆக்ரொஷத்துடன், சீதை மேலிருந்த இரத்தத்துளிகளைப் பார்த்த மறு வினாடி பறக்கிறது ஒரு புல்.ராமனின் அஸ்திரமாக. துரத்துகிறது.அவனும் எல்லா உலகத்திலேயும் அடைக்கலம் கேட்டு, தந்தையிடமும் அது கிடைக்காமல் ராமன்சீதையிடமே வந்து விழுகிறான்.
தன்னைத் துன்புறுத்தியவனிடமும் இரக்கமே
பிறக்கிறது தாய்க்கு. சீதை.
விழுந்த கிடந்த காகத்தின் தலையை இராமன் கால்கள் பக்கமாக திருப்பி விடுகிறாள். இராமன்
விடுத்த அஸ்திரம், வீணாகாமல் அந்த அசுரனின் ஒரு கண்ணை மத்திரம் வாங்கிக் கொள்கிறது. இப்படி அவளைப் போற்றிப் பாதுகாத்தவன்,
தன் சீதாவைக் காப்பாற்ற முடியாமல், கடலரசின் தாமதத்தை எப்படிப் பொறுப்பான்?
மூன்று நாட்கள் பொறுமை காக்கிறான். நான்காம் நாளும் அழைப்புக்கு வராத கடலரசனைக் குறித்து அஸ்திரம் பூட்ட,புல்லணையைவிட்டு எழுந்து, தயார் ஆகிறான்.
அவன் கம்பீரமாக நிற்கும் அழகுதான் எப்படி இருக்கிறது!
நிமிர்ந்த பார்வை, அதில் வைராக்கியம்,மூண்ட கோபம், தண்டிக்கத் தயார்நிலையில் கோதண்டம்.
கதறிக்கொண்டு சரணம் அடைகிறான், சமுத்திரராஜன்.
அவனுடன் கூட வந்த அவனது மனைவியரும் சரண் கேட்டு கை கூப்பி நிற்கின்றனர்.
தன்னிலைக்குத் திரும்பும், ராமனின் கோபம் தணிந்து
சேது அணையில் கவனம் திருப்புகிறான்.

"விபீஷணின் நட்பைக் கொண்டான்,
ராவணனை வென்றான்//
வீரமாதா ஜானகி தேவியைத் தீக்குளிக்க செய்தான்.
கற்பின் கனலைக் கனிவுடன் ஏற்று
அயோத்தி நகர் மீண்டான்,
கலங்கிய மக்கள் களிப்புற ராமன் அரசுரிமை கொண்டான் அரசுரிமை
கொண்டான்."//
இந்தக் கடைசி வரிகள் "லவகுசா" என்னும் படத்தில் லவனும் குசனும் ராமனின் எதிரே வால்மீகியின் நூலை அரங்கேற்றம் செய்யும்போது பாடும் பாடல்.
கேட்கும்போதே நம் மனம் உருகும்.
ஆனந்த ராமனாகச் சீதையோடு எழுந்தருளி இருக்கும்
தாசரதியை வணங்குவோம்.





Rangamama-3

Vanakkam. ரஙக மாமா கதை, கவிதை எழுதுவான் என்று சொன்னேன் இல்லயா? இந்த போட்டோவும் அவனுக்கு கவிதை கொடுத்து இருக்கும். "அசைந்தாடு...