Wednesday, June 28, 2006

கி.இராஜநாராயணன் அய்யா--2

அய்யாவும் போனுக்கு வந்து யார் என்று விசாரித்து விட்டு பேச ஆரம்பித்தார். அவ்வளவு எளிமையான பேச்சை நான் இதுவரை கேட்டது இல்லை.
எங்க அம்மா அப்பா ஊரு பேரு எல்லாவற்றையும் விசாரித்தவர் விவரத்தைக் கேட்டு வருத்தப்பட்டார்.
அதற்கப்புறம் அடிக்கடி கதை கேட்பதற்கே நான் போன் செய்வதும் அம்மாவும் அவரும் நடந்த நிகழ்ச்சிகளைக் கோர்வையாக சொல்வதும் மிகப் பழகிப்போன ஒன்றாகிவிட்டது.

அதன் பயன் ,அதுக்கப்புறம் நடந்த புத்தகக் கண்காட்சியில் அகரம் பதிப்பகத்தில் அய்யவுடைய நான்கு புத்தகங்களை வாங்கியதுதான்.

எல்லாவற்றையும் இன்னும் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

அம்மாவும் அய்யாவும் ஒரு நாள் மதியம் போன் செய்து
அடுத்த நாள் அவர்கள் சென்னைக்கு முத்தமிழ் விழா ஒன்றில் கலந்து கொள்ள வருவதாகவும், எங்க வீட்டுக்கு அப்படியே வரலாமா என்று கேட்டதும்,
எனக்குப் பேச்சே வரவில்லை.

இவ்வளவு பெரிய ம்னிதர்களோடுப் பேசிப் பழகி இருந்தால்தானே வார்த்தைகள் அருமையாக வெளியே வரும்?

வாங்க, கட்டாயம் வரணும் எனறு சொல்லி விட்டு மறுநாள் காலையிலிருந்து காத்துக் கொண்டிருந்தோம் நானும் எங்க வீட்டுக்காரரும்..

காலையில் தொலைபேசியில் உறுதி வேறு செய்து கொண்டேன். மனசு மாறிவிடப் போகிறதே என்றூ.
வந்தார்களம்மா இருவரும் . ஒரு வழக்கமான, அம்மா அப்பா வருகை போலத்தான் இருந்தது.
கணவதி அம்மாவின் பாசம்,அய்யாவின் வீட்டை சுற்றிப் பார்க்கும் அழகு எல்லாம் எனக்கு அதிசயமாக இருந்தது.
அவர்கள் என்ன சாப்பிட்டார்களோ என்னவோ என்று விசாரித்தேன். அய்யாவுக்கு நல்ல காப்பி போதும் சக்கரை கம்மியா என்று அம்மாவும், அவளுக்கு நல்ல பால் போரும் சக்கரையே வேண்டாம் என்று அய்யாவும் சொல்லி விட்டார்கள்.
அதற்குப் பிறகு எங்க வீட்டு மீனாட்சிதான் பேச்சைத்தன் பக்கம் இழுத்துக் கொண்டது. இப்படிக்கூட தனிமையாக ஒரு பிறவி உண்டா என்று சிரிப்பு.
எல்லாவற்றிற்கும் சிரிப்புதான்.
வாங்கின புத்தகங்கள் எல்லாவற்றிலும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்,. தான் பழகின சக எழுத்தாளர்கள் பற்றின சுவையான சம்பவங்களைச் சொன்னார். அம்மாவும் அப்போதைக்கப்போது கலந்து கொண்டார்கள்.
என் பிரமிப்பு நீங்கவே மேலும் ஒரு மணி நேரம் ஆனது

அவர்கள் பாண்டிக்குப் பயணம் புறப்பட வேண்டும். வீட்டுக்குப் போய் தோசை சுட வேண்டும் என்று பழகின ரொடீன் அன்றாட வாழ்க்கைக்கு வந்து விட்டார்கள்.
நானும் புத்தகங்களிருந்து கேட்க நினைத்து இருந்த ஒரு சந்தேகத்தைக் கூடக் கேட்கவில்லை.
அவர்களைப் பார்த்ததே பெரிய புண்ணியம் தான்.
அந்த இரண்டு மணி நேரமும் இரு வயது முதிர்ந்த இளமை நிறைந்த வாழ்க்கையின் ரகசியம் தெரிந்த
இரு நல்ல மனிதர்களைப் பார்த்துப் பழகியதுதான் எங்கள் வீட்டில் நிரவி இருந்தது.
எத்தனை முரண்பாடுகளை இருவரும் சந்தித்து
இருக்கிறார்கள்!!
வாழ்வின் கரடு முரடான பாதை எங்கும் பயணம் செய்து
அலுப்புக் காட்டாமல் வாழ்க்கயை ரசித்து ருசிப்பதே தலையாய கடமையாக, ஒரு தவமாக இயங்கும், யாரிடமும் தப்பையே கண்டுபிடிக்காமல் நிறைவையே காணும் இரு அற்புத மனிதர்களைச் சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது
மீண்டும் அவர்களைப் பார்த்துப் பேசும் நாளுக்காகக் காத்து இருக்கிறோம்.
அய்யா அவர்களிடம் அவரைப் பற்றி எழுதப் போகிறேன் என்றதும் உடனே மீனாட்சியைப் பற்றிய தன் எண்ணங்களை எழுதிக் கட்டுரையை ஆரம்பிக்கலாம் என்று சிரித்துக் கொண்டெ ஐடியா கொடுத்தார்.
ஒரு நல்ல மனிதரையும் அவரது குடும்பத்தையும் அடையாளம் காண்பித்துக் கொடுத்த எங்க அம்மாவுக்கு நன்றி..

Sunday, June 25, 2006

டணால் தங்கவேலு

திரு என்.எஸ்.கே, டி.எ.மதுரம் தம்பதிகளின் சுத்தமான நகைச்சுவைக்குப் பிறகு எங்களைக் கவர்ந்தது டணால் தங்கவேலு என்று அறியப்பட்ட திரு கே.ஏ.தங்கவேலுவின் காமெடி தான்
Posted by Picasaஎங்களுக்குத் தெரிந்து அவரை நாங்கள் ரசித்தது கல்யாணப்பரிசு படத்தில்.
ஒரு ரொடீன் காமெடியாக இல்லாமல் டைரக்டர் ச்ரிதரின்
முயற்சியில் இந்தப் படத்தில்
எல்லோருமே நல்ல இயல்பான நடிப்பைத் தந்து இருந்தார்கள்.
கதையின் தொடக்கம், முடிவு எல்லா இடங்களிலும் தங்கவேலுவும் அவரது மனைவி சரோஜாவும் நிறைந்து இருந்தார்கள்.
எங்கள் எல்லோருக்கும் நகைச்சுவை டையலாக் அத்துப்படி ஆகி இருந்தது.
"நீங்கயாரு சார், நாங்க ராஜமன்னார் கம்பனி'
அண்ணாச்சீ, என்னாச்சி,உங்களை சந்திச்சு அனேக நாளாச்சினு கால்ல விழுந்தான், சிசிச்சீ, கால்ல விழாத,
வந்த வேலையை சொல்லு"
ஏதோ சம்திங்..னான்
அப்படியே அவனுக்கு ஒரு நூறு கொடுத்து வந்தேன் என்று அலட்டிக்கொள்ளும் நடிப்பு இனிமேல் பார்க்க முடியாது.
எழுத்தாளர்கள் இன்னாட்டு முதுகு எலும்புனு சொன்னேன் பார். தட்டினான்,தட்னான்.
யாரு உங்களையா?

ஆ.என்னை எப்படித் தட்டுவான், நாந்தான் மேடைலே இருந்தேனே.
அவ்வளா பெரிய கூட்டத்திலே இத்தனியூண்டு மாலையா போட்டாங்க?
ஆங்..அதை எடுத்து வரணும்னா ரெண்டு ,ரெண்டு!!லாரி வேணும்."

நல்லதொரு டூப் மாஸ்டராக வந்து நம்மை மகிழ வைப்பார்.
அதெபோல், அறிவாளி படத்தில் முத்துலட்சுமியுடன் வந்து செய்யும் அட்டகாசம், ஒரு இயற்கையான சுத்தமான
அக்மார்க் சிரிப்புக்கு பார்க்க வேண்டிய படம்.

மனைவிக்கு அறிவூட்ட, நாகரீகம் சொல்லித்தர முயல்வார்.
அதை அனாகரீகமாக சொல்லாமல் அழகாக பழக்குவார்.
முத்துலக்ஷிமியும் சளைக்காமல் ஈடு கொடுப்பார்.
அதில் ொரு வசனம் இதுபோல் வரும். "என் சினெகிதன் ஆளவந்தான் குடும்பத்தைப் பாரு. ,எல்லாரும் மூக்கு மேல விரல் வைக்கிறாங்க"

மு.லக்ஷ்மி----"இதென்ன பிரமாதம், என்னைப் பார்த்து, எங்க ஆலுங்க கூடத்தான் உஊஊனு சொல்லறாங்க"

த .. வேலு --- ஆஹா அவன் வுவுவுவ்னு ஏதாவது நாயைக் கூப்பிட்டு இருப்பான்"

அவர் நடித்த மற்றப் படங்கள், அனுபவித்துப் பார்க்க வேண்டியவை
பார்த்தால் பசி தீரும்,
பாக்கியலட்சுமி
மாயா பஜார்,
அடுத்த வீட்டுப் பெண்.
இவை எல்லாம் என் நினைவுக்கு வருகின்றன
எல்லாவற்றுக்கும் மேல் அவரது கொள்கை.

யாரையும் அழிவுச் சொற்களால். நகைச்சுவைக்காகக் கூடத் திட்ட மாட்டராம்.
தமிழில் எத்தனையோ நல்ல வார்த்தைகள் இருக்கும்போது கெட்ட கசப்பான இயற்கைக்கு மாறான சொற்களை ஏன் பயன்படுத்த வேண்டும் என்று கேட்பாராம்.
இன்ஸ்டன்ட் விட் எனப்படும் நகைச்சுவை உணர்வு அவரிடமும், அவர் மனைவியிடமும் இருந்தது.
இரண்டு பேரும் நடத்தின மேடை நாடகங்களும் நல்ல புகழைப் பெற்றன.

திரு தங்கவேலுவின் வாழ்க்கையை ப் பற்றி நம் ஊரு ப்ஃலிம் நியூஸ் ஆனந்தன் சாரிடம் தான் கேட்க வேண்டும். எங்கள் வாழ்க்கையிலும் தமிழ்மக்கள் வாழ்க்கையிலும் செம்மையான நகைச்சுவை கொடுத்த திருவாளர் டணால் தங்கவேலுவை எப்போதுமே மறக்க முடியாது.

Rangamama-3

Vanakkam. ரஙக மாமா கதை, கவிதை எழுதுவான் என்று சொன்னேன் இல்லயா? இந்த போட்டோவும் அவனுக்கு கவிதை கொடுத்து இருக்கும். "அசைந்தாடு...