Wednesday, July 05, 2006

மரணம் உதவும்--தேன்கூடு போட்டி

தேன்கூடு-போட்டி/மரணம்--5/7/2006

அவன் அதுவரை மரணத்தைப் பற்றி பயப்படாதவன். நெருப்புன்னு சொன்னா வாய் வெந்தா போகும் என்ற வாக்குவாதம் வேறு. அவன் கவலைப் பட்டதெல்லாம் எஞ்சினீயராகப் படிக்கும்மகனை அடுத்த கட்டஉயர்வாக அமெரிக்காவுக்கு அனுப்புவது எப்படி என்றுதான்.

எல்லாருக்கும் உண்டான நியாயமான ஆசைதானே.
மகனும் அப்பாவை ஏமாற்றவில்லை.
ஊர் சுத்தப் போகவில்லை. வகுப்பு "கட் " செய்யலை..எல்லாவிதமான அவசியமான துணைவகுப்புகளுக்கும் போக
அப்பா உதவி செய்தார்.
அலுவலகத்திலிருந்து இதற்காகவெ 10 மைல் தூரத்திலிருந்து,தன்னுடைய ஸ்கூட்டரில் பயணம் வந்து,அது மழை நாளோ, வெய்யில் நாளோ மகன் விரும்பும் டியூஷன் வகுப்புக்குக் கூட்டிக் கொண்டு போனான்
அதே ஸ்கூட்டரை மகன் கையில் ஒப்படைக்க அவனுக்குமனம் இல்லை.சாலைகள் சரியில்லை. மகனைப் பாதுகாக்க வேண்டும்.பசிக்கு ஏதாவது வாங்கித் தர வேண்டும். தான் போகாத உயரத்துக்கு அவனை
செல்ல வைக்க வேண்டும்

.நான் அவனைக் கேலி செய்ததுண்டு. இப்படியாவது கஷ்டப்படாவிட்டால் என்னப்பா, நம்ம சென்னை போதாதா? இங்கே இப்போதுகிடைக்காத வேலையா?ம்ஹூம்.யாராலும் அவன் மனதை மாற்ற முடியவில்லை.இதற்காகவே தான் செய்யும் வேலையில் மற்றவர்கள் போக மறுக்கும் இடங்களுக்குப் போய்,

வெற்றிகரமாக அரசாங்கப் பணிகளை முடித்து
அவார்ட்ஸ் & ரிவார்ட்ஸ் பெற்றுக்கொண்டான்.வேலை வேலை ஓயாத வேலை.விருந்துக்கோ மருந்துக்கோ நேரமில்லை.கேட்டால் அதே சிரிப்பு.

உடம்பு ஒத்துழைக்க மறுக்கும்.முதுகு கெஞ்சும், எனக்குக் கொஞ்சம் ஸ்கூட்டரிலிருந்து விடுதலை கொடு என்று.
அப்போதெல்லாம் இருக்கவே இருக்கிறது, நண்பனின் கார்.அலுவலகத்துக்கு லீவு சொன்ன நாள் கிடையாது.
இடைப்பட்ட காலத்தில் அவன் அம்மாவும் நோய்வாய்ப் பாட்டதுதான்அவனுக்கு அதிர்ச்சி.கொஞ்ச நாட்களுக்கு அன்னையும் ஆஸ்பத்திரியுமாகக் கழித்தான்.இவ்வளவுக்கும் நடுவில் அவன் அலுத்துக் கொண்டு நான் பார்த்ததே இல்லை.

இந்த ஒரு சமயத்தில் தான் அவன் வருந்தி நான் பார்த்தேன்.அழுதும் விட்டான். அம்மா என்னை விட்டுப் போய் விடுவாளா என்று.நாங்கள் நானும் அவன் அம்மாவும் சேர்ந்துஅவனை மீண்டும் சரிப்படுத்தினோம்.

மற்றபடி சிரிப்பு ,சினிமா இவைகள் அவனுக்கு மிகவும் பிடித்த ,கருவிகள் .நன்றாகப் பாடுவான்.
எங்கிருந்தோ வந்தான், பாரதிப் பாட்டு ரொம்பப் பிடிக்கும்.
அதன் முடிவில் படிக்காத மேதை படத்தில்
ரங்கராவ் அவர்கள் சிவாஜி கணேசனை நினைத்து
'ரங்கா ரங்கா ' என்று பாடுவது தனக்கு மிகப் பொருத்தம் என்பான் .
.எனக்கு முதலில் இவன் மூலம்தான்ஜோக் புத்தகம் பரிசு கிடைத்தது.. அவனிடமிருந்து கேட்டதுதான் இந்த யானை,எறும்பு,என்சைகிளைப் பிடியா. முதலான கடி வகை அறுவைகள்
சரி மரணத்துக்கும் இவனுக்கும் என்ன உறவு?அவனும் மரணமும் ஒரு இரவு சந்தித்து விட்டார்கள்.இரவு அம்மாவுக்குத் துணையாகப் படுக்கச் சென்றவன் அந்த அம்மாகால் பக்கத்திலேயே உயிரையும் கொடுத்து விட்டான்.தூக்கத்தில் உயிரையே வாங்கும் sleep apnea!
அதீதமான குறட்டை விடுகிறவர்களுக்கு சில சமயம் மூச்சு தடைபடுமாம். அப்போதேமார்படைப்பு, மரணம்.
ஒரு நல்லது நடந்தது.அவன் மகன் வெளிநாடு போனான்.அவனுக்குப் போவதற்காகவும், படிப்பதற்காகவும் அந்த பல்கலைக் கழக பண உதவியும் கிடைத்தது. இவன் ஒடி ஓடி சம்பாதித்ததற்கும் ஒரு மதிப்பு கிடைத்தது. ஒரு லட்சியம் நிறைவேறவும்அவன் மரணம் உதவியது.

Rangamama-3

Vanakkam. ரஙக மாமா கதை, கவிதை எழுதுவான் என்று சொன்னேன் இல்லயா? இந்த போட்டோவும் அவனுக்கு கவிதை கொடுத்து இருக்கும். "அசைந்தாடு...